இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது (காலை 10 மணி வரை) 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.