ரகசிய சந்திப்பின் நோக்கம் என்ன.?
இது தொடர்பாக கள விசாரணையில் இறங்கிய போது அதானி நேற்று மாலை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு வந்ததாகவும் அங்கு முதலமைச்சரை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு தகவலோ அதானி முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கவில்லை முதலமைச்சரின் மருகன் சபரீசனை சந்தித்தார் என சொல்லப்படுகிறது. அதானியின் சந்திப்பு ரகசியமாக வைக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலும் பல வித தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில் கடந்த அதிமுக ஆட்சியில நிலக்கரி வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதலமைச்சர் வீடு தேடி அதானி வந்ததாக கூறப்படுகிறது.