ஆம்ஸ்ட்ராங் கொலை- தொடரும் கைது
இதனையடுத்து முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், சிறையில் இருந்த மற்ற குற்றவாளிகள் உயிருக்கு பயந்து கொலைக்கு பின்னனியில் யார் உள்ளார்கள் என வாக்குமூலம் கொடுக்க தொடங்கினர்.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து திமுக, பாஜக, அதிமுக என அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். அதன்படி அதிமுகவை சேர்ந்த மலர்கொடி, ஹரிதரன், பாஜகவை சேர்ந்த அஞ்சலை உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது வரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.