11 பேர் சரண்- என்கவுன்டரில் ஒருவர் சுட்டுக்கொலை
இந்த சூழ்நிலையில் தான் கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் தனது புதிய வீட்டின் கட்டுமான பணியை பார்வையிட்டு வந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை துடிக்க, துடிக்க வெட்டிக்கொன்றனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 11 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் ஆற்காடு சுரேஷ் வழக்கில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருந்ததால் பழிக்கு பழிவாங்கவே கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு தெரிவித்தார்.