திமுகவின் வெற்றியில் பங்கு
பிரபல அரசியல் வியூகரான பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தமிழக அரசியல் களத்தையும் கணித்துள்ளார். அந்த வகையில் 2016, 2019 மற்றும் 2021 என தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் திமுகவின் அரசியல் வியூக வல்லுநராகவும் ஆதவ் ஆர்ஜூனா பணிபுரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' அமைப்பை தொடங்கி அதன் மூலம் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிகழ்வுகளை இந்த 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' அமைப்பு நடத்திவுள்ளது. அப்போது அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் ஆதவ் அர்ஜூனா,