ரஜினியுடன் சேர்ந்து புதிய கட்சி தொடங்க திட்டமா.? சந்தித்தது ஏன்.? அண்ணாமலை வெளியிட்ட ரகசிய தகவல்

Published : Sep 23, 2025, 11:12 AM IST

புதிய கட்சி தொடங்குவதாகவும், அதற்காக ரஜினிகாந்தை சந்தித்ததாகவும் பரவிய தகவல்களுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். ரஜினிகாந்துடனான சந்திப்பு முற்றிலும் ஆன்மீகம் மற்றும் நட்பு அடிப்படையிலானது என தெரிவித்துள்ளார். 

PREV
15

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார். புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. 

25

மேலும் பாஜக மாநில தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட நயினார் நாகேந்திரன் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனும் கூட்டணியில் இருந்து வெளியேறினார்கள்.

எனவே இந்த தலைவர்களை ஒருங்கிணைத்து புதிய கட்சியை அண்ணாமலை தொடங்க இருப்பதாகவும், இதற்காக நடிகர் ரஜினி காந்தை சந்தித்து ஆலோசித்ததாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில் இந்த தகவலுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

35

பாஜக நிர்வாகி ராதிகா சரத்குமாரின் தாயார் மறைவிற்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு அண்ணாமலை சென்று அஞ்சலி செலுத்து ராதிகாவிற்கு ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிட்ம பேசிய அண்ணாமலை,டிடிவி தினகரனை சந்தித்து பேசியதாகவும், கூட்டணியில் இடம்பெற அழைப்பு விடுத்தாகவும் தெரிவித்தார். 

அப்போது அவரது கருத்தை தினகரன் கூறியதாகவும் கூறினார். ரஜினியோடு சந்திப்பு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ரஜினி சாரை அடிக்கடி சந்திப்பேன். மாதத்திற்கு ஒருமுறை, இரண்டு முறை சந்திப்பேன். அதை நான் சமூக வலை தளத்தில் சூப்பர் ஸ்டாரை பார்த்தேன் என பதியவில்லை.

45

சூப்பர் ஸ்டார் என் தலைவர், அவரை சினிமா நடிகராக பார்க்கவில்லை. ஆத்மார்த்தமான நட்பு இருக்கக்கூடிய, ஆன்மிகத்தில் அடிப்படையில் முதலில் இருந்து பழக்கம் உள்ளது. ஆமாம் சமீபத்தில் கூட சந்தித்தேன். அடிக்கடி சந்திப்பது தான். அதனாலே இன்றைக்கு பார்த்தார்கள். 

இப்படி பார்த்தார்கள் என சூப்பர் ஸ்டார் அடிக்கடி சந்திப்பது வழக்கம். ஆன்மிக அதிகமான விஷயம் சொல்லுவார். யோகா போக செல்லுவார . தலைவராக அறிவுரை கூறுவார். குருவாக பார்க்கிறேன். அவரை தயவு செய்து அரசியல் களத்தில் இழுத்து வந்து அவரை பார்த்தார் என கூற வேண்டாம்.

55

அதை செய்தாலும் வெளிப்படையாக செய்பவன், என் பாஜக தலைவர்களிடம் பேசி வருகிறேன் கருத்துகளை வெளிப்படையாக எனது கருத்துகளை பேசிவருகிறேன். யாரையும் ஒளிந்து கொண்டு மறைந்து கொண்டு பார்க்க வேண்டிய தேவையில்லை.

 தனிப்பட்ட முறையில் பார்ப்பதை நான் வெளிப்படுத்துவதில்லை. ரஜியை சந்திப்பது ஏன் வெளிப்படுத்த வேண்டும். அடிக்கடி சந்திப்பது நட்பு அரசியல் கிடையாது. எனவே இதையும் அதையும் முடிச்சு போட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

Read more Photos on
click me!

Recommended Stories