நெல்லை மாவட்ட அணைகள் நிலவரம்
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டத்தை பொறுத்தவரை, பாபநாசம் அணையில், உச்சநீர்மட்டம் : 143 அடி நீர் இருப்பு : 116.55 அடியாக உள்ளது. நீர் வரத்து : 1907.546 கன அடியாகவும், வெளியேற்றம் : 1104.75 கன அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் உச்சநீர்மட்டம் 156 அடியில் நீர் இருப்பு 129.53 அடியாக உள்ளது.
மணிமுத்தாறு அணையின் உச்சநீர்மட்டம் 118 அடியில் தற்போது நீர் இருப்பு 72.73 அடியாகவும், நீர் வரத்து : 158 கனஅடியாகவும் 200 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல வடக்கு பச்சையாறு: உச்சநீர்மட்டம்: 50 அடி, நீர் இருப்பு: 15.50 அடியாக உள்ளது. நம்பியாறு அணையில் உச்சநீர்மட்டம்: 22.96 அடியாகவும், நீர் இருப்பு: 13.12 அடியாக உள்ளது.