மேம்பாலங்களில் இருந்து கார்களை எடுக்கலாம்
மேலும் காற்றழுத்த தாழ்வுநிலை கரையை கடக்கும் போது கனமழை பெய்ய வாய்ப்பு குறைவு. சாதாரண மழை பெய்யலாம்!! கன மழைக்கான வாய்ப்பு தெற்கு ஆந்திராவுக்கு மாறிவிட்டது.சென்னையில் வருகிற 18-20 தேதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலத்தில் நகரும் போது, சாதாரணமாக சமாளிக்கக்கூடிய மழையாக இருக்கும்.
எனவே மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட வாகனத்தை வீட்டிற்கு கொண்டு வரலாம் என சென்னை மக்களுக்கு குட் நியூஸ் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களில் சென்னையில் சில இடங்களில் 30 செமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.