தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டி வரும் நிலையில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் தங்களுக்கு தேவையான உணவு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே வாங்கி தங்கள் வீடுகளில் இருப்பு வைத்துள்ளனர்.