ஆரம்பமே அமர்களமாக வட கிழக்கு பருவமழை
தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. பல இடங்களில் வரலாற்றில் முதல் முறையாக அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. எனவே அதற்கு ஏற்றார் போல் மழையும் இந்தாண்டு கொட்டித்தீர்க்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்து வந்தனர். இதனை மெய்பிக்கும் வகையில் பல இடங்களில் மழை கொட்டோ கொட்டு என கொட்டியது. பல நகரங்கள் தண்ணீரில் மூழ்கியது.
தமிழகத்தையும் மழை விட்டு வைக்கவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோவை, சென்னை, திருப்பூர் என பல மாவட்டங்களில் மழை பெய்தது. வடகிழக்கு பருவ மழை துவக்கமே அதிர்ச்சியை கொடுத்தது. வரும் நாட்களில் மழை எப்படி இருக்குமோ என மக்கள் அச்சமை அடைந்துள்ளனர்.