தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
இருந்த போதும் வானிலை மையத்தின் அலர்ட் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது. தனியார் நிறுவன ஊழியர்களும் வீட்டில் இருந்தே பணி புரிய உத்தரவிடப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் மற்றும் நேற்று மழைக்கு பதிலாக வெயில் வாட்டி வதைத்தது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை இன்று காலை நேரத்தில் பெய்து வருகிறது. இந்த மழை தொடருமா என பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பலாமா என விடுமுறை விடப்படுமா என காத்திருந்தனர்.