“நான் அரசியலுக்கு வந்தது அதிகாரத்திற்காக அல்ல, மக்கள் நலனுக்காக. அண்ணா சொன்னது போல நான் மக்களிடம் செல்கிறேன்,” என்றார். குறிப்பிட வேண்டியது என்னவெனில், விஜய் தனது உரையில் மத்திய அரசு, பாஜக, அதிமுக குறித்து எந்த குறிப்பும் செய்யவில்லை. முழு உரையிலும் திமுக அரசையே தனது முக்கிய எதிரியாகக் காட்டி கடுமையாக விமர்சித்தார்.
முன்பு நடந்த பிரச்சார கூட்டங்களில் பாஜக மற்றும் அதிமுகவை சில முறை அதிகமாகவும், சில முறை குறைவாகவும் விமர்சித்தார் விஜய். தற்போது திமுகவை மட்டுமே டார்கெட் செய்து தனது உரை முழுக்க பேசியுள்ளது, திமுகவே தன்னுடைய பிரதான எதிரி என்று விஜய் தீர்மானித்துவிட்டார் என்பது தெளிவாக தெரிகிறது.