காஞ்சிபுரம் மக்களின் பிரச்சனைகளை உரையில் வலியுறுத்திய விஜய், பாலாறு நதியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். “இந்த காஞ்சிபுரத்தைக் காத்து வாழ வைப்பது பாலாறு. இந்த மண்ணில் வாழ்வவர்களின் ரத்தத்தோடு கலந்து ஓடுகின்ற நதி இது. ஆனால், பெயர் பலத்த தலைவர்களை. சொல்லிக்கொண்டு ஆட்சியில் இருப்பவர்கள், இந்த நதிக்காக என்ன செய்திருக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார். அண்ணாதுரை மண்ணில் பேசுவதால் உணர்வோடு பேசுவதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து, எம்ஜிஆர் தனது கட்சிக் கொடியில் அண்ணாவின் படத்தை வைத்ததற்கான காரணத்தையும் விளக்கினார். "அண்ணாவும் எம்ஜிஆரும் மக்களுக்காக இருந்தவர்கள். அவர்கள் போல் செயல் காட்டுவோம், காட்டுவது போல நடிக்கப் போவதில்லை" என்று வலியுறுத்தினார். பொதுவாக எதுவும் தனிப்பட்ட விரோதமாக பேசவில்லை, மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் கேள்வி எழுப்புவது தான் எங்கள் கடமை எனவும் தெளிவுபடுத்தினார். மேலும், பரந்தூர் மற்றும் காஞ்சி பகுதிகளில் தொடங்கி தனது அரசியல் பயணத்தையும் நினைவுபடுத்தினார்.