தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் எடுப்பதிலும், பணி நியமனம் செய்ததிலும் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாகவும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் தமிழக பொறுப்பு டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை இரண்டு முறை கடிதம் எழுதியும், தமிழக காவல்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.
சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கே.என்.நேரு மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேருவை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.