அதன் அடிப்படையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் தற்போது கட்சியின் தலைவர் விஜய்யை நேரில் ஆஜராகுமாறு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிபிஐ அளித்துள்ள சம்மனில், வருகின்ற 12ம் தேதி டெல்லியில் அமைந்துள்ள விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.