'இன்றைய திமுக அரசுக்கு எதிராக அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதிமுக தனித்து நின்றாலே வெற்றிபெறும்' என்ற நம்பிக்கையை உருவாக்குவது தான் ஒரு தலைவருக்கான உண்டான தகுதியும், தன்னம்பிக்கையும். ஆனால் மாற்றுக்கட்சியை நம்பி இவர்களெல்லாம் நம் கூட்டணிக்கு வருகிறார்கள், மெகா கூட்டணி உருவாகிறது என்றெல்லாம் பேசுவது தன்னால் தனித்து நின்று திமுகவை வீழ்த்த முடியாது என்று ஒப்புக்கொள்வதற்கு சமம். சென்னையில் அண்ணா பிறந்த நாள் விழாவில் பேசும்போதும் கூட "எனக்கு ஆட்சி முக்கியமல்ல, தன்மானம் தான் முக்கியம்" என்று பேசினார்.