இதன் காரணமாக மூச்சு கூட விட இடமில்லாத வகையில் கூட்டமானது அதிகரித்திருந்து. இதனால் ஒரு கட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் பலர் மூச்சு திணறி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். இதில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்கள் பலியானார்கள்.
இந்த சம்பவம் கரூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் தவெக தலைவர் விஜய்யை போலீசார் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. போலீசாரின் பல்வேறு நிபந்தனைகளை தவெக கண்டுகொள்ளவில்லையென்றே கூறப்படுகிறது.