இதனையடுத்து இன்று சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு அளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், திடீரென பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதில் தங்களை ஏமாற்றி கையொப்பம் பெற்று வழக்கில் தங்களை மனுதாரர்களாக இணைத்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பிரபாகர், செல்வராஜ், பன்னீர் செல்வம் ஆகியோர மனு தாக்கல் செய்யவே இல்லையெனவும் கூறியுள்ளனர். இன்று தீர்ப்பு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட் என்ன முடிவு எடுக்கும் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.