எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது கோடை வெயிலும் தொடங்கியுள்ளது. இதனால், ஏசி, ஏர் கூலர், மின் விசிறி ஆகியவற்றின் பயன்பாடுகள் அதிகரித்ததால் மின்தேவையும் அதிகரிக்கும். இதனால் பல இடங்களில் மின்தடை ஏற்படும். இதனை தடுக்க மின்சார வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.