தேர்தல் வாக்குறுதி..
ஆட்சிக்கு வரவேண்டுமென்பதற்காக சாத்தியமில்லாத வாக்குறுதிகளை நான் கொடுக்க மாட்டேன். தேர்தல் அறிக்கை தயாராகிக்கொண்டு இருக்கிறது. விஜய்யை நம்பும் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்.
சிலர் காசு கொடுத்து ஓட்டு வாங்கலாமென கனவு கான்கிறார்கள். அதுவும் இந்த விஜய் வந்த பின்னர் நடக்கவே நடக்காது. வண்டி வண்டியாக பணத்தை இறக்குவார்கள். 2000, 5000 என கொடுப்பார்கள். அவர்கள் கொடுப்பதை வாங்கி வைத்துக் கொண்டு அவர்கள் காதிலேயே விசிலை ஊதி அனுப்புங்கள்.
திமுக அளித்த வாக்குறுதியில் 90 சதவீதம், 80 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக சொல்கிறாாகள். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புளுகர் பெருமானே” என காட்டமாக பேசினார்.