பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புளுகர் பெருமானே.. ஸ்டாலினை வறுத்தெடுத்த விஜய்

Published : Feb 13, 2026, 02:03 PM IST

TVK Vijay Speech in Salem: திமுக அறிவித்த 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக முதல்வர் பொய் சொல்வதாக தவெக தலைவர் விஜய் காட்டமாக தெரிவித்துள்ளார்.

PREV
13
பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விஜய் ஆளும் கட்சியான திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், “தேர்தலுக்கு முன்னாடி ஒரு பேச்சு, ஜெயிச்சதுக்கு அப்புறம் ஒரு பேச்சு. 'பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புளுகர் பெருமானே'ன்னு சொல்ற அளவுக்கு இன்னைக்கு ஆளுங்கட்சியின் நிலைமை இருக்கு. நீட் ரத்துன்னு சொன்னாங்க, ஆனா இன்னைக்கு வரைக்கும் மாணவர்களை ஏமாத்திக்கிட்டு இருக்காங்க."

23
அதிமுக, திமுக.வுக்கு பகிரங்க சவால்

என்னை நேசித்த மக்களுக்காக மட்டுமே நான் அரசியலுக்கு வந்தேன்; அது தவறா? மற்ற கட்சிகள் மாநாடு நடத்தவோ, கூட்டம் நடத்தவோ அனுமதி கொடுக்கப்படுகிறது. நான் மக்களை சந்திக்கவும், மக்கள் என்னை சந்திக்கவும் இடம் தர மாட்டார்கள் தரவும் விடமாட்டார்கள். அடுத்தவர்கள் தொடங்கிய அரசியல் கட்சியில் அரசியல்வாதிகளாக இருந்துகொண்டு இருப்பவர்களுக்கு ஒரு சவால்.. என்னை மாதிரி சொந்தமாக ஒரு கட்சி ஆரம்பித்து 1 சதவீதம் ஓட்டு வாங்கி காட்டும் தில்லு இருக்கா? திராணி இருக்கா?

33
தேர்தல் வாக்குறுதி..

ஆட்சிக்கு வரவேண்டுமென்பதற்காக சாத்தியமில்லாத வாக்குறுதிகளை நான் கொடுக்க மாட்டேன். தேர்தல் அறிக்கை தயாராகிக்கொண்டு இருக்கிறது. விஜய்யை நம்பும் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்.

சிலர் காசு கொடுத்து ஓட்டு வாங்கலாமென கனவு கான்கிறார்கள். அதுவும் இந்த விஜய் வந்த பின்னர் நடக்கவே நடக்காது. வண்டி வண்டியாக பணத்தை இறக்குவார்கள். 2000, 5000 என கொடுப்பார்கள். அவர்கள் கொடுப்பதை வாங்கி வைத்துக் கொண்டு அவர்கள் காதிலேயே விசிலை ஊதி அனுப்புங்கள்.

திமுக அளித்த வாக்குறுதியில் 90 சதவீதம், 80 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக சொல்கிறாாகள். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புளுகர் பெருமானே” என காட்டமாக பேசினார்.

Read more Photos on
click me!

Recommended Stories