சேலத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பேசிய விஜய் , ''உங்களிடம் ஓட்டு கேட்காமல் நீதி கேட்க வந்துள்ளேன். மக்களை சந்திக்க மற்றவர்களுக்கு அனுமதி தரும்போது விஜய்க்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன்?
விஜய் செய்த தவறு தான் என்ன? மக்களுக்காக அரசியலுக்கு வந்த விஜய் செய்த தவறு என்ன? பிறகு ஏன் இப்படி செய்கிறீர்கள்? தமிழ்நாடு தான் எனது வீடு. என்னை சீண்டி பார்ப்பவர்களுக்கு ஒன்று கூறுகிறேன்.
தமிழ்நாடு தான் எனது தாய் வீடு
தமிழ்நாடு தான் எனது தாய் வீடு. தமிழ்நாடு எனக்கு சொந்தம். தமிழ்நாட்டின் முதல் படை வீரன் நான் தான். விஜய் பனையூரை விட்டு வெளியே வா என கூறுபவர்களுக்கு எனது வீடு எங்கே இருக்கிறது என தெரியுமா?' என்று தெரிவித்தார்.