மாநாட்டுக்கான தேதி மாற்றப்பட்ட பின்னர், த.வெ.க.வின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் அக்கட்சியினர் திருமங்கலம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனுசுல் நாகரிடம் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி மனு அளித்தனர்.
அப்போது, மாநாடு நடைபெறும் இடம், எதிர்பார்க்கப்படும் கூட்டத்தின் அளவு, வாகன நிறுத்துமிடம், உணவு மற்றும் குடிநீர் வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்டத்தில் பங்கேற்கும் முக்கிய தலைவர்கள் குறித்த 42 கேள்விகளை காவல்துறை முன்வைத்தது. இந்தக் கேள்விகளுக்கு த.வெ.க. தரப்பில் விரிவான பதில்கள் அளிக்கப்பட்டன.