மதுரையில் வருகிற 21ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலை ஓரங்களில் பேனர்கள், கட்சிக் கொடிகள் வைக்க கூடாது, ஊர்வலமாக வரவோ, போகவோ கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.