கோபாலபுரம் இல்லத்திற்கு விரைந்த விஜய்யின் மனைவி சங்கீதா; ஏன்?

First Published Oct 10, 2024, 8:32 PM IST

Sangeetha Vijay : தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் தளபதி விஜயின் மனைவி சங்கீதா, முக்கியமான விஷயமாக இன்று கோபாலபுரம் சென்றுள்ளார்.

Sangeetha Vijay

மக்கள் மனதை இன்று பெரிய அளவில் உலுக்கிய இரண்டு விஷயங்கள் தான் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா அவர்களின் மறைவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான பத்திரிக்கையாக செயல்பட்டு வரும் முரசொலியின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்த முரசொலி செல்வம் அவர்களது மறைவுவும். 84 வயது நிரம்பிய முரசொலி செல்வம், இன்று அக்டோபர் மாதம் 10ஆம் தேதி காலை காலமானார். அவருடைய மறைவுக்கு பல அரசியல் தலைவர்களும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

மூத்த பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் செயல்பட்டு வந்தவர் முரசொலி செல்வம். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது மறைந்த கலைஞர் கருணாநிதி உடன் பிறந்த சகோதரி சண்முக சுந்தரம்மாளின் மகன் தான் முரசொலி செல்வம். கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைவால் அவர் அவதிப்பட்டு வந்த நிலையில், பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மாரடைப்பு காலமாக அவர் காலமானார்.

"தமிழக அரசே போராடவிடு" சாம்சங் ஊழியர்கள் விவகாரம் - இயக்குனர் பா ரஞ்சித் ஆவேசம்!

CM stalin

இவருடைய மறைவுக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டு இருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்.. "கருணாநிதியின் மூத்த மகனாக, சிறு வயது முதலே முரசொலியின் பணிகளை தன்னுடைய தோளில் சுமந்து சென்றவர் செல்வம். என்னுடைய அரசியல் வளர்ச்சியில் எனக்கு மிகப்பெரிய தூணாக பேரன்பு கொண்ட அண்ணனாக திகழ்ந்தவர் அவர். இதுவரை நான் சாய்ந்துகொள்ள கிடைத்த ஒரே ஒரு தோள் அவருடையது தான். ஆனால் அவரையும் இன்று இழந்து தவிக்கிறேன். தன்னுடைய எழுத்துக்களால் ஜனநாயகத்தினுடைய உரிமை குரலாக ஒழித்த அண்ணன் செல்வம் திரைப்படம் மற்றும் அரசியல் என்று பல துறைகளில் தன்னுடைய முத்திரையை பதித்தவர். என்னை நானே அவருடைய இழப்பால் ஆற்றுப்படுத்தமுடியாமல் இருக்கும் நிலையில் யாருக்கு நான் ஆறுதல் சொல்வேன்" என்று கூறியிருந்தார்.

Latest Videos


Rajinikanth

அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில்.. "திரு முரசொலி செல்வன் என்னுடைய நீண்ட கால நண்பர். பழகுவதற்கு எளிமையான மனிதர். அவருடைய மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. அவருடைய ஆத்மா சாந்தியடைய நான் ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்" என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல ரத்தன் டாட்டா அவர்களுடைய மறைவுக்கு, அவரோடு எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Sangeetha

இந்த சூழலில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான தளபதி விஜயின் மனைவி சங்கீதா, தற்பொழுது நேரடியாக கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று மறைந்த முரசொலி செல்வத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார். கண்டிப்பா தளபதி விஜய் சொல்லியனுப்பி தான் சங்கீதா இந்த நிகழ்விற்கு வந்திருப்பார் என்று சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. மேலும் விஜய் மற்றும் சங்கீதா பிரிந்து வாழ்கின்றனர் என்ற வதந்திக்கு அடிக்கடி இந்த நட்சத்திர ஜோடி பதிலடி கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

TNPSC Exam: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வெளியானது முக்கிய அறிவிப்பு!

click me!