"தமிழக அரசே போராடவிடு" சாம்சங் ஊழியர்கள் விவகாரம் - இயக்குனர் பா ரஞ்சித் ஆவேசம்!

First Published Oct 10, 2024, 7:57 PM IST

Samsung Employees Protest : சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்ட விஷயத்தில் தமிழக அரசை கண்டித்து ஒரு பதிவினை இப்பொழுது வெளியிட்டு இருக்கிறார் பிரபல திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித்

Pa Ranjith

கடந்த ஒரு மாதகாலமாகே சாம்சங் நிறுவன ஊழியர்களின் போராட்டம் இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்றால் அது மிகையல்ல. காஞ்சிபுரத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் என்கின்ற பகுதியில் தான் "சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ்" நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு தான் அந்த நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை ஒன்று நூற்றுக்கனக்கான தொழிலாளர்களால் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த ஒரு மாத காலமாகவே ஊதிய உயர்வு, அதிக அளவில் பணி நேரங்கள் இல்லாமல் பணி நேரத்தை குறைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை மற்றும் அந்த சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து கடந்த போராட்டம் அறவழியில் நடந்து வருகின்றது. 

TNPSC Exam: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வெளியானது முக்கிய அறிவிப்பு!

Employees Strike

கடத்த செப்டம்பர் மாதம் முதல் சுமார் 35 நாட்களுக்கும் மேலாக சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அந்த நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்த நிலையில், இந்த போராட்டத்தில் எந்த விதமான தவறும் இல்லை என்று கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என்கின்ற மனுவையும் நிராகரித்து தீர்ப்பளித்து இருக்கிறது உயர்நீதிமன்றம். சுமார் 90% ஊழியர்கள் கடந்த ஒரு மாத காலமாக கால வரையறையற்ற போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த சூழலில் இன்று அக்டோபர் மாதம் 10ம் தேதி வழக்கம் போல போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று கொண்டிருந்த சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்களை, சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள காவல்துறையினர் வழிமறித்து போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறி அவர்களை கைது செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த இடத்திற்கு போராட்டத்திற்காக வரும் அனைவரையும் காவல்துறை கைது செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

Latest Videos


Samsung Employees strike

நாளுக்கு நாள் இவர்களுடைய போராட்டத்தின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் பல கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவாக இப்போது குரல் கொடுக்க தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சாம்சங் ஊழியர்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்று தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார். ஆனால் தமிழக அரசு சாம்சங் ஊழியர்களை போராட விடாமல் தடுப்பதாகவும் சிலர் கூறி வருகின்றனர். 

இதற்கு பதில் அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சாம்சங் நிறுவனம் பன்னாட்டு நிறுவனம் என்பதால் அவர்களுடைய சங்கத்தில் சிஐடியு சங்கத்தை இணைக்க முடியாது என்றும், அந்த ஒரு கோரிக்கையை தவிர அவர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார். 

Ranjith Statement

இந்த நிலையில் தமிழக அரசை கண்டித்து இயக்குனர் பா. ரஞ்சித் வெளியிட்ட பதிவில், ஒரு தொழிற்சங்கம் என்பது நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளிகளின் அடிப்படை உரிமை. ஆகவே தொழிற்சங்கம் வேண்டி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வேலை நிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களுடைய சட்டபூர்வ உரிமைகளுக்கு உட்பட்ட தான் இந்த வேலை நிறுத்தத்தை இப்போது செய்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு அதை மதிக்கவில்லை, அதற்கு மாறாக தனியார் நிறுவனங்களுக்கு தான் சாதகமாக நடந்து கொள்கின்றனர். இது மிகவும் மோசமான அணுகுமுறை, மேலும் தொழிலாளர்களை பயமுறுத்த காவல்துறையை ஆயுதமாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. ஆகவே தமிழக அரசை தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு என்று ட்வீட் செய்துள்ளார்.

Tamilnadu Heavy Rain: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப்போகுது தெரியுமா?

click me!