திருச்சி மாவட்டம் நவகுடியை சேர்ந்தவர் திருமுருகன். இவரது மனைவி துர்காதேவி. இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து கடந்த 27ம் தேதி மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்த பிறகு அதற்கு இருதய குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து குழந்தை உடனே மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.