சென்னையும் பண்டிகை நாட்களும்
சொந்த ஊரியில் படித்த படிப்பிற்கு வேலை கிடைகாமலும், ஏதாவது வேலை கிடைக்குமா என எதிர்பார்ப்பிலும் சென்னையை நோக்கி தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் படையெடுத்து வருகின்றனர். வந்தவர்களை வாழ வைக்கும் சென்னையில் வெளியூர்களை சேர்ந்தவர்கள் தான் லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர்.
தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என விஷேச நாட்களுக்கு சொந்த ஊருக்கு சென்று உறவினர்களோடு பண்டிகையை கொண்டாட விரும்புவார்கள். இதற்காக பேருந்து, ரயில், சொந்த வாகனங்கள் மூலம் சென்னையை காலி செய்து விட்டு 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள்.