தமிழகத்தில் ஃபெங்கல் புயல் விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடியது. இதனால், இம்மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.