School Working Day: நாளை பள்ளிகள் முழு நேரம் செயல்படும்! வெளியான முக்கிய அறிவிப்பு!

Published : Nov 29, 2024, 12:51 PM ISTUpdated : Nov 29, 2024, 02:12 PM IST

தென்காசியில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 23ம் தேதி பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

PREV
14
School Working Day: நாளை பள்ளிகள் முழு நேரம் செயல்படும்! வெளியான முக்கிய அறிவிப்பு!
Tamilnadu Heavy Rain

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில் தமிழகத்தில் சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் கடந்த 19ம் தேதி இரவு விடாமல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 

24
School Leave

இதனையடுத்து தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். 

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய செய்தி! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

34
School Holiday

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக  அதாவது நவம்பர் 23ம் தேதி சனிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாகும் என அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், அன்றைய தினம் வாக்காளர் முகாம் (சேர்க்கை, நீக்கம் மற்றும் சரிபார்ப்பு) நடைபெறுவதையொட்டி வேலை நாள் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்திருந்தார். 

44
School Working Day

அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் 30ம் தேதி (சனிக்கிழமை) அதாவது நாளை பள்ளி முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories