மீண்டும் விஸ்வரூபம் எடுத்த ஃபெங்கல் புயல்.! எப்போது கரையை கடக்கிறது லேட்டஸ்ட் அப்டேட்!!

Published : Nov 29, 2024, 11:02 AM ISTUpdated : Nov 29, 2024, 11:42 AM IST

Cyclone Fengal Alert : வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் நவம்பர் 30 ஆம் தேதி தமிழக கடலோரப் பகுதிகளில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும், கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

PREV
14
மீண்டும் விஸ்வரூபம் எடுத்த ஃபெங்கல் புயல்.! எப்போது கரையை கடக்கிறது லேட்டஸ்ட் அப்டேட்!!
chennai rain

நெருங்கும் புயல்

வட கிழக்கு பருவமழை தீவரம் அடைந்துள்ள நிலையில்  வானிலை தகவல்கள் நேரத்திற்கு நேரம். நொடிக்கு நொடி மாறி வருகிறது. அந்த வகையில்  இந்த பருவகாலத்தில் முதல் புயல் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புயல் வலுவடையாமல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது மீண்டும் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில், காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டது.

 

24
Fengal Cyclone latest update

ஃபெங்கல் புயல் வலு அதிகரிப்பு

ஆனால் தற்போது ஆழ்ந்த காற்றழுந்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாற சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக உருவாகக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு நோக்கி நகர்ந்து,

நவம்பர் 29ஆம் தேதி  நாகப்பட்டினத்திலிருந்து கிழக்கே 310 கி.மீ. புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 360 கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

34
Fengal Cyclone land fall

நாளை மாலை கரையை கடக்கிறது

இது ஃபெங்கல் புயல் நவம்பர் 30 ஆம் தேதி பிற்பகலில் ஒரு சூறாவளி புயலாக வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக  காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 

44
Tamil Nadu Rains

கன முதல் மிக கன மழை

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!

Recommended Stories