இன்று கனமழை பெய்யும்
இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மேகங்கள் வலுவாக உருவாகியுள்ளதால் மதியம் மற்றும் மாலை, இரவு நேரங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இன்று முதல் 30-ஆம் தேதி வரை, குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் முதல் மரக்காணம் வரையிலான கடலோர பகுதிகளில் மிக கனமழை முதல் அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக நாளை (30ஆம் தேதி) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதியில் மழைக்கு துல்லியமாக கண்காணிப்பு தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.