அரசு ஊழியர்களின் செயல்பாடு
மேலும் திட்டங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தால் அதனை சரி செய்ய வேண்டிய கடமை அரசு ஊழியர்களுக்கு உண்டு. அரசு ஊழியர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளை சரிவர செய்யவில்லையென்றால் அரசுக்கு தான் கெட்ட பெயர் உருவாகும்.
இந்தநிலையில் அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலளார் முருகானந்தம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி, தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம், வருவாய்துறை உள்ளிட்ட அரசு அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் சார்பாக ஆயிரக்கணக்கான புகார் மனு அளிக்கின்றனர்.