10 மாவட்டங்களில் காற்றோடு பேய் மழை; சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

Published : Nov 29, 2024, 06:41 AM ISTUpdated : Nov 29, 2024, 10:01 AM IST

Cyclone Fengal: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நவம்பர் 30 ஆம் தேதி தமிழக கடலோரப் பகுதிகளில் கரையைக் கடக்க உள்ளது. இதனால் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
15
10 மாவட்டங்களில் காற்றோடு பேய் மழை; சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!
heavy rain in tamilnadu

காற்றோடு மழை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும். அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில், காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 
 

25
Heavy Rain in Chennai

6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புயலாக வலு பெறாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நாளை கரையை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக   சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

35
Heavy rain in Districts

கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

மேலும் நாளை (30-11-2024) ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளி ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர். திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

45
school holiday

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் காற்றோடு மழை தூரி வருகிறது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மற்றும் விழுப்புரத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
 

55
heavy rain in Tamilnadu

பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு.

click me!

Recommended Stories