தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை; பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை - எந்த மாவட்டத்தில்?

Ansgar R |  
Published : Nov 28, 2024, 08:08 PM IST

Schools and Colleges Leave : தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு கனமழை தொடரவுள்ள நிலையில் ஒரு சில பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

PREV
14
தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை; பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை - எந்த மாவட்டத்தில்?
Cuddalore

இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட முன்னதாகவே வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியது. இருப்பினும் அக்டோபர் மாதம் 2ம் பாதியில் இருந்து, அம்மாத இறுதிவரை பெரிய அளவில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டாலும், சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அக்டோபர் மாத இறுதி வரை பெரிய அளவில் மழை பெய்யவில்லை என்றே கூறலாம்.

"நீங்க 200 கோடினா; நான் 2000 கோடி" மீண்டும் விஜயை வம்பிழுக்கும் சீமான்!

24
Tamil Nadu Rains

இந்த சூழலில் தற்பொழுது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக, வரவிருக்கும் புயல் டெல்டா மாவட்டங்களில் கனமழையை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என்றும், தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான முதல் அதி கனத்த மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

34
Heavy Rain

அதே போல நாளை நவம்பர் 29ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிக கனத்த மழையும், பல இடங்களில் பரவலாக நல்ல மழையும் பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்று திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சாரல் மழை பெய்தாலும் அநேக நேரங்கள் மேகமூட்டத்துடன் தான் வானம் காணப்பட்டது.

44
Heavy Rain in Tamil Nadu

இருப்பினும் நாளை மிதமானது முதல் கனமழை ஒரு இடங்களில் வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் நாளை கடலூரில் நல்ல மழை எதிர்பார்க்கப்படும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். டிசம்பர் 1ம் தேதி வரை அநேக இடங்களில் நல்ல மழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புரட்டிப்போட போகுது பேய் மழை.! இனி தான் மெயின் பிக்சர்.! தேதி குறித்த தமிழ்நாடு வெதர் மேன்

Read more Photos on
click me!

Recommended Stories