வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்தது. நேற்று காலையும் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை விடாமல் வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை இரண்டு நாட்களுக்கு விடுக்கப்பட்டதை அடுத்து இந்த 4 மாவட்டங்கள் உட்பட நேற்று 11 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.