School Holiday: பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா? வெளியான முக்கிய தகவல்!

Published : Oct 16, 2024, 08:40 PM ISTUpdated : Oct 16, 2024, 10:01 PM IST

School Holiday: சென்னையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க உள்ளதால் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

PREV
15
School Holiday: பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா? வெளியான முக்கிய தகவல்!
Chennai rain

வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்தது. நேற்று காலையும் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை விடாமல் வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை  இரண்டு நாட்களுக்கு விடுக்கப்பட்டதை அடுத்து இந்த 4 மாவட்டங்கள் உட்பட நேற்று 11 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

25

இந்நிலையில் இன்றும் திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளிக்கும், ராணிப்பேட்டை செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு  பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் இன்று எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. 

இதையும் படிங்க: TASMAC Shop: குடிமகன்களுக்கு குஷியான செய்தி வந்தாச்சு! டாஸ்மாக் கடைகளில் புதிய வசதி!

35
Chennai rain

இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 320 கி.மீ தொலைவிலும், ஆந்திரப் பிரதேசம் நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 370 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணிநேரத்தில் 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுவைக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கக்கூடும். 

45

அப்போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட  மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாளை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுமா அல்லது விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பில் மாணவர்கள் இருந்து வருகின்றனர்.  இந்நிலையில் தற்போது விடுமுறை குறித்து முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க:  Government Employees DA Hike: எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு! மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!

55

அதில், சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடுவது குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும். இன்று முழுவதும் மழை பெய்யாததால் இரவு பெய்யக்கூடிய மழையைப் பொறுத்து நாளை முடிவெடுக்கப்படும்  என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பகுதியில் நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து மண்டல அலுவலர்கள் முடிவு செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!

Recommended Stories