TASMAC Shop: குடிமகன்களுக்கு குஷியான செய்தி ! டாஸ்மாக் கடைகளில் சூப்பர் ஏற்பாடு!

First Published Oct 16, 2024, 8:08 PM IST

TASMAC Shop: டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் வந்ததை கியூஆர் கோடு மூலம் மது விற்பனை செய்யும் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் இந்த நடவடிக்கை குடிமகன்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில், மதுப்பிரியர்களுக்கு தற்போது மற்றொரு குட்நியூஸ் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்தாலும் வருமானத்தை கொட்டி கொடுக்கும் துறையாக டாஸ்மாக் நிறுவனம் இருந்து வருகிறது. அரசு இயந்திரமே இந்த வருமானத்தில் தான் இயங்குவதாக கூறப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 121 கோடியும், மாதம் 3,698 கோடியும், ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. 

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் வந்ததை கியூஆர் கோடு மூலம் மது விற்பனை செய்யும் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் இந்த நடவடிக்கை குடிமகன்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில், மதுப்பிரியர்களுக்கு தற்போது மற்றொரு குட்நியூஸ் வெளியாகியுள்ளது. தினமும் ரூ.2 லட்சத்துக்கு விற்பனையாகும் மதுக்கடைகளில் 2 விற்பனை பிரிவுகளை தொடங்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

இதையும் படிங்க: இன்னும் மழையின் ஆட்டம் முடியல! சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் ஏன்? அதிர்ச்சி தகவல் சொன்ன வானிலை இயக்குநர்!

Latest Videos


அதாவது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை மொத்தம் உள்ள 4,829 கடைகள் ஏ, பி, சி, டி என 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தினமும் ரூ.2 லட்சத்து மேல் விற்பனையாகும் 'ஏ' பிரிவு கடைகள் 1000 இருக்கின்றன. இந்தக் கடைகளில் தற்போது புதிதாக 2 விற்பனை பிரிவுகள் தொடங்கப்பட உள்ளதால் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. 

இதுதொடர்பாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்: சராசரி விற்பனைத் தொகை ரூ.2 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும் மதுபானக் கடைகளில் 2 விற்பனை பிரிவுகள் அமைக்க வேண்டும். 

இதையும் படிங்க:Government Employees DA Hike: எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு! மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!

டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் முதல் நாள் விற்பனைத் தொகையை வங்கியில் செலுத்திய பிறகு கடை பணியில் இருக்க வேண்டும். இதை உறுதி செய்யும் பொருட்டு மாலை 5 மணிக்கு சம்பந்தப்பட்ட இளநிலை உதவியாளருக்கு ஜி.பி.எஸ். புகைப்படத்தை அனுப்பிவைக்க வேண்டும். மேற்படி கடைப்பணியில் இல்லாத கடை மேற்பார்வையாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மதுபானக் கடையின் கடை எண்ணுடன் கூடிய பெயர் பலகை மற்றும் விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும். அனைத்து விதமான பதிவேடுகளும் தினமும் பராமரிக்கப்பட வேண்டும். கடையின் விற்பனையில் வெளிநபர்கள் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் கடை பணியாளர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுத்து உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!