திடீர் தக்காளி விலை உயர்ந்தது ஏன்.?
இதனையடுத்து தக்காளி விலை உச்சத்தில் இருந்ததால் தமிழக அரசு சார்பாக நியாய விலைக்கடைகளில் தக்காளியை ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இருந்த போதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்காத காரணத்தால் அதிக விலை கொடுத்தே தக்காளி வாங்கும் நிலை ஏற்பட்டது.
தக்காளி விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. குறிப்பாக கடந்த ஆண்டு தக்காளி விலை வீழ்ச்சி காரணமாக குப்பைகளில் தக்காளியை கொட்டும் நிலை இருந்தது. இதனால் நஷ்டம் அடைந்த விவசாயிகள் மாற்று பயிர் செய்ததால் தக்காளி விலை அதிகரித்ததாக தெரிவித்தனர்.