போலீசார் நடத்திய டிராமா.?
மேலும் காவல் நிலையத்திற்கு வெளியே 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் யூ டியூப் சேர்ந்தவர்கள் இருந்ததால் போலீசார் பத்திரிக்கையாளர்களை ஏமாற்ற டிராமா மேற்கொண்டனர். அப்போதுதான் நடிகை விஜயலட்சுமி போன்று ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் உருவ ஒற்றுமையுடைய பெண் போலீஸ் ஒருவரை தயார் செய்து அவரது முகத்தை துப்பட்டாவால் மூடி அவசர அவசரமாக காரில் ஏற்றி செல்வதுபோல் போலீஸ் நிலையத்திலிருந்து காரை வேகமாக சென்றது.
இதனையடுத்து அந்த காரை தொடர்ந்து சிலர் தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர்களும் பின் தொடர்ந்து சென்றனர். அப்போது அந்த வாகனத்தில் எந்த பெண் போலீசும் இல்லாததால் சந்தேகம் அடைந்த நிருப்பர்கள் காவல் நிலையத்தை விட்டு செல்லாமல் அங்கேயே காத்திருந்தனர்.