இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் சுயநிதிப் பிரிவுகளில் 2015ம் ஆண்டு செப்டம்பர் 01ம் தேதி அல்லது அதற்கு முன்னர் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் பிற அதற்கு இணையான பணிநிலைகளில், காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் மற்றும் பகுதிநேர ஊதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டு பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பு கல்வியியல் பட்டதாரி ஆசிரியர்கள் (IEDSS) ஆகியவர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் எனவும் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி இன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.