இதனால் பயணிகள் கவலையில் ஆழ்ந்த நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருவண்ணாமலை, கும்பகோணம், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வருகிற டிசம்பர் 23 (செவ்வாய்கிழமை) 255 சிறப்பு பேருந்துகளும், டிசம்பர் 24 (புதன்கிழமை) 525 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.