ஆயுத பூஜை, தொடர் விடுமுறை: சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

Published : Oct 05, 2024, 06:47 AM ISTUpdated : Oct 05, 2024, 06:55 AM IST

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பகுதிகளில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

PREV
15
ஆயுத பூஜை, தொடர் விடுமுறை: சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
Special Bus

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆயுதபூஜை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு வருகின்ற 9, 10ம் தேதிகளில் (புதன், வியாழன் கிழமை) சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து கூடுதலான பகுதிகள் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் நாள்தோளும் இயக்கப்படும் வழக்கமான பேருந்துகளுடன், கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

25
Special Bus

கிளாம்பாக்கத்தில் இருந்து

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு 9ம் தேதி 225 பேருந்துகளும், 10ம் தேதி 880 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

35
Special Bus

கோயம்பேடு பேருந்து நிலையம்

இதேபோன்று சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு 9ம் தேதி 35 பேருந்துகளும், 10ம் தேதி 265 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

45
Special Bus

மாதவரம்

சென்னை மாதவரத்தில் இருந்து 9, 10ம் தேதிகளில் 110 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று ஞாயிற்று கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு திரும்ப பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

55
Special Bus

ஏற்கனவே புதன் கிழமை பயணம் செய்யும் வகையில் 6,582 பயணிகளும், வியாழன் கிழமை 22,236 பயணிகளும், ஞாயிற்று கிழமை 21,311 பயணிகளும் பிற பகுதிகளுக்கு செல்ல அரசு போக்குவரத்துக் கழகத்தில் முன்பதிவு செய்துள்ளனர். பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்பதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள உள்ள பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் சிறப்பு பேருந்துகளின் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories