விஷேச நாட்களில் சொந்த ஊர் பயணம்
சொந்த ஊரில் வேலை இல்லாத காரணத்தால் லட்சக்கணக்கான மக்கள், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் வேலைக்காக சென்றுள்ளனர். அந்த வகையில் ஏதேனும் விசேஷ நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் மட்டுமே தங்களது சொந்தங்களை பார்ப்பதற்காக ஊருக்கு செல்வார்கள்.
சென்னையில் இருந்து மட்டும் பார்க்கும் பொழுது பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை தினத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேருந்து, ரயில் மற்றும் சொந்த வாகனங்களில் தங்களது ஊர்களுக்கு கடந்த ஆண்டு சென்றுள்ளனர். எனவே இந்தாண்டும் தீபாவளி பண்டிகைக்காக லட்சக்கணக்கான மக்கள் வெளியூர் செல்லதிட்டமிட்டுள்ளனர்.