ரேஷன் கடையில் ரவை,மைதா, கடலை மாவு உள்ளிட்ட தீபாவளி தொகுப்பு- வெளியாக போகும் சூப்பர் அறிவிப்பு

First Published Oct 4, 2024, 11:47 AM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில் மைதா, ரவை உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு விரைவில் முடிவு அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்

தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையானது உழவர்கள் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக உள்ளது. இந்த பண்டிகையை தமிழக மக்கள் உற்சாகமாக கொண்டாடப்படவேண்டும் என தமிழக அரசு சார்பாக நியாயவிலைக்கடைகளில் பச்சரிசி, சக்கரை, வெல்லம், முந்திரி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மட்டுமில்லாமல் கரும்பும் வழங்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்ததையடுத்து பொங்கல் பரிசு தொகையாக ஆயிரம் ரூபாயை சேர்த்து வழங்கி வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை போன்று தீபாவளி பண்டிகையையும் மக்கள் வெகு விமர்சையாக பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை போன்று தீபாவளி பண்டிகைக்கும் நியாயவிலைக்கடைகளில் தீபாவளி தொகுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுடள்ளது. 
 

தீபாவளி தொகுப்பு வழங்கிடுக

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்ட்த்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,   அக்டோபர் 31 தேதி அனைத்துப்பகுதி மக்களாலும் தீவாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் மிகக் கடுமையான விலைவாசி உயர்வின் காரணமாக உழைக்கும் மக்களுக்கு இது தித்திக்கும் தீபாவளியாக அமைவதற்கு மாறாக திண்டாடும் தீபாவளியாக மாறிவிடும் சூழல் இருக்கிறது.

சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலையும், நிரந்தர வருமானமும் சமூகத்தில் சிறு பகுதியினருக்குத் தான் இருக்கிறது. மிகப் பெரும்பாலானவர்கள் முறைசாராத் தொழிலாளர்களும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும், சிறு-குறு விவசாயிகளுமே ஆவர். இத்தகைய பகுதியினர் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத  அளவிற்கு நாடு முழுவதும் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

Latest Videos


மைதா, ரவை,கோதுமை, சீரகம், மல்லி 

எனவே தமிழ் நாட்டில் சுமார்  7 கோடி பேர்களை உள்ளடக்கிய 2.25 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் கடைகளே ஆதாரமாக இருக்கின்றன. இதனைக் கணக்கில் கொண்டு தீபாவளியை எதிர்கொள்வதற்கும் ரேசன் கடைகள் வழியாக அனைத்துப் பகுதி  மக்களுக்கும் தேவையான பொருட்களை வழங்குவது பொருத்தமாக இருக்கும்.

எனவே அரிசி, சர்க்கரை, மைதா, கடலை மாவு, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய், பருப்பு வகைகள், ரவை, மல்லி, மிளகாய் வத்தல், சீரகம், மிளகு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில்  வழங்குவதன் மூலம் 7 கோடி மக்கள் பயன் அடைய முடியும். எனவே ஏழை எளிய மக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு  ரேஷன் கடைகளில் அத்யாவசிய உணவுப் பொருட்களை தீபாவளி தொகுப்பாக  வழங்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துவதாக அந்த தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் முடிவு என்ன.?

இந்தநிலையில் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் வருகிற அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் தீபாவளி தொகுப்பாக மைதா, ரவை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தீபாவளி தொகுப்பு தொடர்பாக உணவு பொருட்கள் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

ஒரே வாரத்தில் பல லட்சம் சம்பாதிக்க சான்ஸ்.! பட்டாசு கடை வைக்க விண்ணப்பிப்பது எப்படி.? வெளியான அறிவிப்பு
 

click me!