டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்
ஆண்டு தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தமிழக அரசு பணிகளில் இணைய வேண்டும் என இரவு பகல் பாராமல் அரசு பணியாளர் தேர்விற்கு தயாராவார்கள் அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி சார்பாக பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் 8,932 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ம் தேதி வெளியானது. அதன் படி கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளார்க் என பல பணிகளுக்கு ஜூன் 9ம் தேதி தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெற்றது.