களை கட்டிய தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளி கொண்டாட்டம் தற்போதே களைகட்ட தொடங்கியுள்ளது. புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்க அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் தீபாவளி கொண்டாட்டம் என்றால் கேட்கவா வேண்டும் அதைவிட தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைத்தால் விட்டு விடுவார்களா.? தற்போதே பல பிளான்களை மக்கள் போட தொடங்கிவிட்டனர்.
வெளியூரில் இருந்து சென்னை உள்ளிட்ட இடங்களில் படிக்க, வேலை பார்க்க வந்தவர்கள் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில், உறவினர்களோடு கொண்டாட ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்துவிட்டனர். மேலும் தங்களது சொந்த வாகனங்கள் மூலம் இன்று மாலை முதல் புறப்பட தயாராகி வருகின்றனர்.