அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! வெளியான முக்கிய அறிவிப்பு

First Published Oct 28, 2024, 1:54 PM IST

தமிழக அரசு ஊழியர்கள் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் தொடர்பாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அரசு ஊழியர்கள் போராட்டம்

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஓய்வுக்கு பிறகு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை,  மற்றும் ஓய்வூதியம் ஆகியவை வழங்கி வருகிறது. அந்ந வகையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு உரிய வகையில் ஓய்வூதிய நிதியை ஒதுக்கவில்லையென தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழக அரசு சூப்பர் செய்தியை அறிவித்துள்ளது. அதன் படி , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் 1279 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.372.06 கோடி வழங்கிட நிதி ஒதுக்கி தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.

tamilnadu bus

போக்குவரத்து ஊழியர்களுக்கு குட் நியூஸ்

இது தொடர்பாக போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த ஏப்ரல் 2022 முதல் நவம்பர் 2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3414 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.1031.31 கோடி வழங்கிட 29/03/2023 அன்று உத்தரவிட்டார்கள்.

Latest Videos


chennail bus file

நிதி ஒதுக்கிய தமிழக அரசு

அதன்படி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த ஏப்ரல்-2022 முதல் நவம்பர்-2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3414 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.1031.31 கோடி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கடும் நிதி நெருக்கடியிலும், தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கருணை உள்ளத்தோடு,

372 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் 1279 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.372.06 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக்கொள்வதாக அந்த அறிவிப்பில் போக்குவரத்து துறை செயலாளர் கூறியுள்ளார். 

click me!