அரசு ஊழியர்கள் போராட்டம்
அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஓய்வுக்கு பிறகு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, மற்றும் ஓய்வூதியம் ஆகியவை வழங்கி வருகிறது. அந்ந வகையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு உரிய வகையில் ஓய்வூதிய நிதியை ஒதுக்கவில்லையென தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழக அரசு சூப்பர் செய்தியை அறிவித்துள்ளது. அதன் படி , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் 1279 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.372.06 கோடி வழங்கிட நிதி ஒதுக்கி தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.