தமிழகத்தில் பொதுவாக மே, ஜூன் மாதங்களில் அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம். மேலும் தனியார் பள்ளிகள் விஜயதசமி பண்டிகையின் போதும் பல்வேறு சலுகைகளை வழங்கி மாணவர் சேர்க்கையில் ஈடுபடுவர். இந்நிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை மேம்படுத்தும் வகையில் அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.