இது விமானிகளுக்கு வழக்கமான ஒரு செயல்முறை என்றாலும், மிகவும் அரிதாக நடைபெறும் பிரச்சனை இது என்பதால் சுமார் 2 மணி நேரம் விமானம் வானில் பறந்தது, கீழே இருந்த மக்களுக்கும், விமானத்தில் பயணித்த 144 பயணிகளில் உறவினர்களுக்கும் மிகப்பெரிய பதட்டத்தை ஏற்படுத்தியது. ஆனால் விமானத்தின் உள்ளே பயணித்த ஒருவர் தற்போது அளித்த தகவலின்படி அவர்கள் சார்ஜாவிற்கு தான் சென்று கொண்டிருப்பதாக நினைத்ததாகவும். இறங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகத்தான் வண்டியில் இயந்திர கோளாறு இருப்பது தங்களுக்கு தெரிய வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.