2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் எக்சிட் போல்கள், திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என கணித்துள்ளன. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான இடங்களைப் பெற்று, ஒரு புதிய சக்தியாக உருவெடுக்கும் வாய்ப்பை இந்த கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவடைவதைத் தொடர்ந்து வெளியாகியுள்ள எக்சிட் போல்கள், மாநில அரசியலில் புதிய சமன்பாட்டை வெளிப்படுத்துகின்றன. பல்வேறு ஆய்வு நிறுவனங்களின் கணிப்புகள் வெளியான நிலையில், NDTV – Axis My India இணைந்து வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் படி, திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி 125 முதல் 145 இடங்கள் வரை வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
25
மீண்டும் ஆட்சி அமைக்கும் திமுக
அதே நேரத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி 65 முதல் 80 இடங்கள் வரை பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக, தமிழக வெற்றிக் கழகம் 18 முதல் 24 இடங்கள் வரை வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் சேர்த்து 2 முதல் 6 இடங்கள் வரை மட்டுமே பெறும் என இந்த ஆய்வு கூறுகிறது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் இருக்கும் நிலையில், இந்த கணிப்புகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளன. கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதே சமயம், அதிமுக கூட்டணி எதிர்க்கட்சியாக வலுவான நிலையைத் தொடரும் எனவும் கணிக்கப்படுகிறது.
35
தவெகவுக்கு அதிர்ச்சி கொடுத்த எக்சிட் போல்
இந்த தேர்தலின் தனிச்சிறப்பு, புதிய அரசியல் சக்திகளின் வருகை மற்றும் வாக்காளர்களின் மாற்றமான மனநிலை தான். விஜய் தலைமையிலான தவெக, முதல் முறையாக தேர்தலில் களம் இறங்கிய நிலையில், இருபதுக்கு அருகிலான இடங்களைப் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் மூன்றாவது சக்தியாக உருவெடுக்கக்கூடிய சாத்தியத்தை காட்டுகிறது.
இதனுடன், ‘மின்னம்பலம்’ வெளியிட்ட தனித்த எக்சிட் போல திமுக கூட்டணி 155 இடங்கள் வரை பெறும் எனவும், அதிமுக கூட்டணி 72 இடங்கள், தவெக 5 இடங்கள் பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு கணிப்புகளில் வித்தியாசம் இருந்தாலும், திமுக முன்னிலை என்பது பொதுவான கருத்தாகத் தெரிகிறது.
55
.பின்னடைவில் விஜயின் தவெக
மொத்தத்தில், இந்த எக்சிட் போல்கள் தமிழகத்தில் ஆட்சிப் போட்டி தீவிரமாக இருந்தாலும், திமுக கூட்டணி முன்னிலையில் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. அதே நேரத்தில் தவெக போன்ற புதிய கட்சிகள் வாக்கு சதவீதத்தில் கனிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இறுதி முடிவுகள் வெளியாகும் வரை இந்த கணிப்புகள் அரசியல் சூட்டை மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். மே 4ஆம் தேதி வெளியாகும் அதிகாரப்பூர்வ முடிவுகளே இந்த கணிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.