டெல்டா மண்டலத்தில் திமுக கூட்டணிக்கு சிறிய முன்னிலை உள்ளது. திமுகவுக்கு 20 இடங்கள், அதிமுகவுக்கு 18 இடங்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இங்கு 8 தொகுதிகள் மிகவும் நெருக்கமான போட்டியில் உள்ளன. தவெக சுமார் 19% வாக்கு பங்கைக் கொண்டுள்ளது. இது நேரடியாக வெற்றியாக மாறவில்லை என்றாலும், இரு முக்கிய கூட்டணிகளின் கணக்கை பாதிக்கும் அளவுக்கு உள்ளது.
கொங்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி வலுவாக முன்னிலை பெற்றுள்ளது. 42 இடங்கள் வரை வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. திமுக 13 இடங்களுக்கு மட்டுமே சுருங்கும் நிலை உள்ளது. தவெக இங்கு அதிகபட்சமாக 21.50% வாக்கு பங்கைக் கொண்டுள்ளது. இந்த மண்டலம் அதிமுகவுக்கு முக்கிய பலமாக இருக்கும் என கணிப்பு கூறுகிறது.
வட மண்டலத்திலும் அதிமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. 30 இடங்கள் வரை வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. திமுக 12 இடங்களுக்கு மட்டுமே குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கும் தவெக 21%க்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி சுமார் 4% அளவில் தனது வாக்கு வங்கியை நிலைநிறுத்தியுள்ளது.
மொத்தத்தில், இந்த தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தமிழகத்தில் இரு பெரிய கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதைக் காட்டுகின்றன. அதேசமயம், தவெக போன்ற புதிய அரசியல் சக்தி வாக்கு சதவீதத்தில் கனிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதி முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியாகும் நிலையில், இந்த கணிப்புகள் உண்மையாக மாறுமா அல்லது ஆச்சரியம் ஏற்படுமா என்பது தான் அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.